Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

கோடை மற்றும் குளிர் காலத்தில் சருமத்தை பாதுகாக்க ! முகம் சிவப்பழகு பெற எளிய பாட்டி வைத்தியம் ! Skin Care Tips In Tamil ! Tamil Beauty Tips for Face | Get Beautiful Spotless Glowing Skin

கோடை மற்றும் குளிர் காலத்தில் சருமத்தை பாதுகாக்க ! முகம் சிவப்பழகு பெற எளிய பாட்டி வைத்தியம் ! Natural beauty Tips ! Skin Care Tips for Oily Skin ! Skin Care Tips Tamil ! Skin Care Tips in Summer at Home ! Skin Care Tips Home Remedies ! Skin Care Tips for Men 



Skin Care Tips for Dry Skin :- 

கொளுத்தும் வெயில் காலத்தில் பலருக்கு முக சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, தோல் சுருங்கி விடுவதுடன், வெள்ளை நிறமாகவும் தோற்றம் அளிக்கும். சிலருக்கு உடல் முழுவதும் அரிப்பு உணர்வு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்புகளை நிவர்த்தி செய்யக்கூடிய சுலபமான சருமப் பராமரிப்பு முறைகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி மேற்கொள்ளக் கூடிய சருமப் பராமரிப்பு வழி முறைகளை காணலாம்.

குளிப்பதற்கு முன்னர் தேங்காய் எண்ணெய்யை உடம்பில் நன்றாக தேய்த்துக் கொள்ள வேண்டும். சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக, பச்சைப் பயறு பொடி அல்லது கடலை மாவு ஆகியவற்றை பயன்படுத்தி குளிப்பது நல்லது. குளித்த பின்னர் உடம்பை நன்றாக துடைத்து விட்டு, மீண்டும் தேங்காய் எண்ணெய்யை பரவலாக உடம்பில் தேய்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு சரும பராமரிப்பை தொடர்ந்து செய்து வந்தால், சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். 

மேலும், தோலில் உருவாகும் வெடிப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் கிரீம் வகைகள் எதுவும் பயன்படுத்த வேண்டியதில்லை. தினமும் இந்த பராமரிப்பை மேற்கொள்ள இயலாவிட்டாலும், வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து சருமப் பராமரிப்புக்கு உதவும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி  வரலாம்.

வெயில் காலங்களில் கைகள், கால் முட்டிகள் ஆகிய இடங்கள் சொரசொரப்பாகவும், கருமை நிறத்திலும் காணப்படும். அப்பகுதிகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து தேய்த்த பின்னர், அரை மணி நேரம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், கைகள் மற்றும் கால் மூட்டு பகுதிகள் மிரு துவாகவும், கருமை நிறம் நீங்கி பளபளப்பாகவும் மாறி விடும்.

குளிர் மற்றும் வெயில் காலங்களில் பாதங்களில் ஏற்படும் வெடிப்புகள் இதர அளிக்கும் உள்ளதைவிட அதிகமாக இருக்கக்கூடும். அழகற்ற தோற்றம் வெடிப்புகள் மறைந்து, பாதங்கள் அதன் இயல்பான நிலைக்கு வருவதால் பலர் பாதங்களுக்கான தேய்ப்பான்கள் மற்றும் சொரசொரப்பான பொருட்களைக்கொண்டு தோல் விடுவது வழக்கம். அதற்கு மாறாக, இரவில் உறங்குவதற்கு முன்னர் கணுக்கால் முதல் பாதம் தேங்காய் எண்ணெய்யை, நன்றாக சூடு கிளம்பும் அளவிற்கு தேய்த்து விடலாம். இந்த முறையின் காரணமாக பித்த வெடிப்புகள் மறைவதுடன், உடல் வலி, அசதி ஆகியவையும் நீங்கும். 

சருமத்தைப் பாதுகாக்க சிறந்த குளியல் வழிமுறைகள் :-

How to Take Care of Your Skin in Tamil :-

கோடைகாலத்தில் குளியல் மிக அவசியம் ஆனால், அது சரியான முறையில் இல்லாவிட்டால் சருமம் மற்றும் தலைமுடியில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. 

சிலர் சற்று அதிகமாக வியர்வை வடிந்ததுமே குளிக்கச் சென்றுவிடுவார்கள். இதுபோன்று அடிக்கடி குளிப்பதால், இயற்கையாக உள்ள ஈரப்பதத்தையும், மென்மையையும் சருமம் இழக்க நேரிடும். இதனால் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, தோல் வறண்டு காணப்படும். அரிப்பு போன்ற பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கோடைகாலத்தில் தினம் இரு முறையும், மழைக்காலத்தில் ஒரு முறையும் மட்டும் குளிப்பது சிறந்தது. 

சருமத்துக்கு ஏற்ற சோப் தேர்வில் எப்போதும் கவனமுடன் இருக்க வேண் டும். சருமத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப சோப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் சோப் சருமத்துக்கு ஒவ்வாததாக இருந்தால், அதை உடனே தவிர்ப்பது நல்லது. மேலும், உடலுக்குப் பயன்படுத்தும் சோப், முகத்துக் குப் பயன்படுத்தும் சோப்பை தனித் தனியாக வைத்திருப்பது சிறந்தது. முடிந்தவரை முகத்துக்கு சோப் பயன்படுத்துவதற்குப் பதில், ரசாயனம் அதிகம் சேர்க்காத பேஸ்வாஷ்களை பயன்படுத்துவது நல்லது. அதேபோல், அதிக நுரை உள்ள சோப்களைப் பயன்படுத்தாமல், சருமத்துக்கு ஏற்ற சோப்பைப் பயன்படுத்தலாம். 

துண்டு விஷயத்தில் கவனம் முக்கியம் சோப் பயன்படுத்துவதுபோல துண்டு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சிலர், உடலுக்குப் பயன்படுத்தும் துண்டை தலைக்கும் பயன்படுத்துவர். எப்போதும், உடலுக்கும் தலைக்கும் தனித்தனியாக துண்டு பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை துண்டை பயன்படுத்தியதும், அதை தரமான சோப்பைக் கொண்டு துவைத்து, வெயிலில் நன்கு உலர்த்திக் காய வைக்க வேண்டும். துண்டில் முழுமையாக ஈரம் காய்ந்த பிறகே பயன்படுத்த வேண்டும். 

பருவ காலத்துக்கு ஏற்ப நீரைப் பயன்படுத்துவது சிறந்தது. தலைமுடியை அலசும்போது அதிக சூடான நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சூடான நீரைப் பயன்படுத்தினால் மயிர்க்கால்கள் வலுவிழக்கத் தொடங்கும். மிதமான சுடுநீரை பயன் படுத்துவதே சிறந்தது. 

சிலருக்கு காக்கா குளியல் பிடிக்கும். இன்னும் சிலருக்கு நீண்ட நேரம் குளிப்பது பிடிக்கும். ஆனால், 10 நிமிடங்கள் குளியலுக்கு செலவிடுவதே போதுமானது. நீண்ட நேரம் குளிப்பதால், உடலில் எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. 

குளித்து முடித்த பிறகு சருமத்தில் வறட்சி ஏற் படாமலிருக்க மாய்ஸ்சுரைசர் தடவிக் கொள்ள வேண்டும். இப்போது, சரும வகைகளுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. அதில், சரியானதைத் தேர்ந்தெடுத்து, குளித்து முடித்தபின் கட்டாயம் தடவிக கொள்ள வேண்டும். பொதுவாக சுத்தமான தேங்காய் எண்ணெய்தான் சருமத்துக்கு சரியான மாய்ஸ்சுரைசர் என்பதால், அதைத் தடவினாலே போதும்.குளியல் ஒரு சாதாரண அன்றாட நிகழ்வுதான். அதில் சில நெறிமுறை களைக் கடைப்பிடித் தால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம். 

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க :-  👈 மேலும் படிக்க கிளிக் செய்யவும்

முகச்சுருக்கம் மற்றும் முகப்பருவை போக்கும் கொய்யா இலை :-

Beauty Tips Tamil :-

பளபள முகத்திற்கு கொய்யா இலைகளை காய வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனை நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால், முகச்சுருக்கங்கள் மறையும் மேலும்  இளமை ததும்பும்.

கொய்யா இலையை, ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும், பின் 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், அழகு அள்ளும், கொய்யா இலையில் பாக்டிரியாக்களை கொல்லும் தன்மை உள்ளது. 

கொய்யா இலையை அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால், முகம் பளபளப்பாக இருக்கும்.

கற்றாழைச் சாறுடன், கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால், முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும்.

கொய்யா இலை, பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்துப் பூசி வந்தால், முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி அழகு கூடும் .

உடலை ஸ்லிம்மாக சிக்குன்னு வைத்துக்கொள்ள:-  👈 மேலும் படிக்க கிளிக் செய்யவும்

கருவளையப் பிரச்சினையா ?

Skin Care Tips Home Remedies :-

ஒரு உருளைக்கிழங்கை அரைத்து, கண்களைச்சுற்றி பூசி வந்தால், கருவளையம் மறையும். 

கண்களை குளிர்விக்கும் வகையில், கேரட் அல்லது வெள்ளரி பிஞ்சை மெல்லிதாய் நறுக்கி, வாரம் ஒன்றிரண்டு முறை கண்களின் மேல் வைத்தால் நல்ல பலனளிக்கும்.

தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறைக் கலந்து, கருவளையத்தின் மீது பூசி வர வேண்டும். பூசிய 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால், கருவளையம் நீங்கி அழகு பெறலாம்.

இரவில் கண்களைச் சுற்றி, பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவி வந்தால், கரு வளையத்திலிருந்து விடுதலை பெறலாம்.

நல்ல தூக்கமும், கண்களுக்கு தேவையான அளவு ஓய்யும் கொடுத்தால், கருவளையத்திற்கு சில சீக்கிரமே டாட்டா சொல்லி அனுப்பிவிடலாம்.

நகங்கள் பராமரிப்பு :-

நகங்களை வெட்டும் முன், அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டால், சுலபமாக வெட்டலாம். நல்லெண்ணெய்யை சூடுபடுத்தி, மசாஜ் செய்தால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

இளஞ்சூடான தண்ணீரில் துளசி, புதினா, மற்றும் வேப்ப இலையைப் போட்டு, நகங்கள் மூழ்குமாறு 10-15 நிமி டங்கள் வைத்தால், கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும். 

நகங்களைப் பராமரிக்க, கால்சியம் சத்துள்ள உணவுகள் உண்பது மிக அவசியம்  ஆரஞ்சுப் பழத்தோலைக் காய வைத்துப் பொடியாக்கி, கொஞ்சம் உப்பு சேர்த்து எண்ணெய்யில் குழைத்து, நகங்களில் தடவி வந்தால் பளபளப்பு கூடும்.

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து, நகத்தைச் சுத்தப்படுத்தினால் பளபளவென்று இருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies