நடிகை அமலா பால் தனக்கு மிகவும் பிடித்த செல்ல பிராணியான பூனைகளுடன் தனது அம்மா வீட்டில் உள்ள குட்டி பூணனைகளுடன் உற்சாகமா இருக்கு தருணத்தை புகை படம் எடுத்து வெளியிட்டுள்ளார் !!! Actress Amala Paul Images
அமலா பால் (Actress Amala Paul ) கேரளாவில் உள்ள ஆளுவா மாவட்டத்தில் அக்டோபர் 26, 1191 ம் ஆண்டு பிறந்தார். அமலா பால் முக்கியமாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 2009 ம் ஆண்டு பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் இயக்கிய மலையாள மொழி திரைப்படமான நீலதமராவில் துணை வேடத்தில் நடித்து சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு, தமிழில் வெளிவந்த மைனா எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக மைனா வேடத்தில் நடித்த பிறகு அமலா திரையுலகத்தில் தனெக்கென ஒரு அடையாளத்தை பிடித்தார், அப்படத்தில் அவரது சிறந்த நடிப்பால் கேரளா சினிமா துறை நிபுணரிகளிடம் இருந்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றார்.
இவர் அதற்கு முன்னேரே சிந்து சமவெளி எனும் திரைப்படம் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் Amala Paul, இருபின்னும் அப்படம் அவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை அளிக்கவில்லை அதன் பிறகு இயக்குனர் பிரபு சொலோமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அக்கட்டத்தில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். அதன் பிறகு படிப்படியாக தனது அசத்திய நடிப்பால் வெளிவந்த திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா துறையில் நட்சத்திர நடிகையாக உருவெடுத்து தமிழ் நாட்டின் தளபதி நடிகர் விஜயுடன் தலைவா படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பை பெற்றார்.
நட்சத்திர நாயகியாக உருவெடுத்த பின்னர் அமலா பாலின் மீது ஏற்கனவே காதல் கொண்ட இயக்குனர் விஜய் அமலா பாலிடம் தனது காதலை கூறி இருவரும் ஒப்புக்கொண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு Amala Paul சில படங்களில் சில நடிகர்களுடன் முத்த காட்சிகள் மற்றும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் நடித்து வந்ததால் அதை ஒரு போதும் விரும்பாத இயக்குனர் விஜய் ஆகையால் சில வருடங்களிலேயே இருவருக்கிடையில் கருத்து வேறுபாடு எழ ஆரமித்தனர் அதுவே அவர்களுக்கு விவாகரத்து பெற்று இந்த அழகிய காதல் சிட்டுகளை பிரியச்செய்தது.
விவாகரத்திற்கு பிறகு, மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் காதலிப்பதாகவும், நெருக்கமாக அவருடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல பரவி வந்தன. அதன் பிறகு அப்பாடகருக்கும் அமலா பாலுக்கும் ரகசியமக மும்பையில் திருமணம் நடைபெற்றதாக கூறி மும்பை நியூஸ் சேனெல்களில் ஒளிபரப்பாகியது.
இந்நிலையில் பாடகர் பவ்னிந்தர் சிங் அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளிவந்த செய்திகள் மற்றும் அமலா பாலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முற்றிலும் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டவை என அமலா பால் மற்றும் பவ்னிந்தர் சிங் இருவரும் விளக்கம் அளித்தனர்.
இவர் தற்போது அதோ அந்த பறவை போல (Adho Andha Paravai Pola) எனும் தமிழ் படத்திலும் , பரன்னு பரன்னு பரன்னு (Parannu Parannu Parannu ), ஆடுஜீவிதம் (Aadujeevitham) போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.