மறைந்த காமெடி நடிகர் விவேக்கின் கனவு நிறைவேறுமா? மரக்கன்று நடும் பணியில் தீவிரம் காட்டும் நடிகர் சங்கம் !!! Actor Vivek's Dream !!! Actor Vivek !!! Actor Vivek Saplings News
நடிகர் விவேக் 1961 ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில் பட்டியில் பிறந்தவர். இவரது உண்மையான பெயர் விவேகானந்தன் ஆகும். படிப்பை முடித்துவிட்டு நடிப்பில் உள்ள ஆர்வத்தாலும் , தனக்குள்ள நகைசுவை திறமையினாலும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தார். இவர் கல்லூரி காலத்திலே இவரது திறன் அறிந்த சென்னையில் உள்ள ஒரு நகைசுவை மன்றம் இவரை அம்மன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் சங்கத்திலில் உறுப்பினராக சேர்த்து கொண்டது. பின்னர் நடிகர் விவேக் அந்த சங்க மூத்த அதிகாரிகளின் உதவியால் இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் அவர்களிடம் அறிமுகம் பெற்று அவரது இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் காமெடி நடிகனாக சினிமா துறைக்கு இயக்குனர் பாலசந்தர் ஆல் 1987 ம் ஆண்டு அறிமுக படுத்த பட்டார்.
மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் நடிகர் விவேக்குடன் நடித்த இளம் நடிகை ஆத்மீகா தற்போது தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அவர் ஆத்ம சாந்தி அடைய பிராத்தித்து வருகிறார். நடிகை ஆத்மீகா, நடிகர் திரு விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். மேலும் என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியை செய்ய முடிவு செய்துள்ளேன். அவர் விட்டு சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தான கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம் என கூறியுள்ளார்.
Aathmika Plants Saplings in Remembrance of Actor Vivek
நடிகர் விஜயகுமார் அவர்கள் தனது வீடு தோட்டத்தில் பல்வேறு மரக்கன்றுகளை தன் மகன் அருண் விஜய் மற்றும் பேரன்களுடன் நட்டுள்ளார்.
இதனை அடுத்து படி படியாக திரைப்பட வட்டாரத்திலிருந்து மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்றுகளை நடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபு இயத்தில் நடிகர் சிம்பு நடித்துவரும் மாநாடு படப்பிடிப்பின் போது அப்பட குழுவினர் அனைவரும் மரக்கன்றுகளை நாட்டு அவரது கனவு நனவாக விவேக் விட்டு சென்றதை செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிகழ்வில் அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கதாநாயகன் சிம்பு, கதாநாயகி கல்யாணி ப்ரியதர்சன், சண்டை பயிற்சியாளர் மற்றும் சகா நடிகர்கள் ஊழியர்களும் பங்கேற்றன.
இவ்வாறு திரைப்பட துறையினர் மட்டும் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தி வந்த இந்நிலையில் அச்செய்திகள் அனைத்தும் பலவலாக தமிழகம் முழுவதும் பரவி தமிழகத்தில் உள்ள அனைத்து நடுத்தர மக்களும் அவரது கனவை நனவாக்கும் பணியில் களமிறங்கியுள்ளனர். இவ்வாறு தமிழத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகரில் ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு அங்கங்கே மரக்கன்றுகளை நாடு வந்த செய்து மிகவும் தமிழகத்தில் வைரலாகி வருகிறது.
உலகநாயகன் பத்ம ஸ்ரீ கமல் ஹாசன் நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என இருந்து விடாமல் தனக்கு செய்த சமூகத்திற்கு தானும் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பியவர் செய்தவர் நண்பர் விவேக், மேதை கலாம் அவர்களின் இளவளாக , பசுமைக் காவலராக வளம் வந்த விவேக்கின் மரணம் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு , மரங்களை விதைத்து மண்களில் முளைத்த ஜனங்களின் கலைஞனுக்கு என் புகழஞ்சலி என இரங்கல் தெரிவித்தார்.
30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்த விவேக் அவர்கள் இதுவரை கமல ஹாசன் உடன் எந்த படமும் நடித்ததில்லையாம் ஆனால் நடிகர் விவேகிற்கோ நீண்ட நாட்களாக கமல ஹாசனுடன் இணைத்து படத்தில் நடிக்க ஆசை. எனவே நடிகர் விவேக்கிற்கு என்னிடம் சேர்ந்து நடிக்க முதன் முதலாக சங்கர் இயக்கத்தில் வெளியாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்த காட்சிகளில் இதுவரை அட்டகாசமாக நடித்துள்ளதாக திரு கமல ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் விவேக் மறைந்து விட்ட இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில் இவரை வைத்து எடுத்த காட்சிகள் அனைத்தும் நீக்க பட்டு வேற ஒரு நபரை வைத்து அக்கட்சிகள் அனைத்தும் எடுக்க போவதாக இயக்குனர் சங்கர் கூறி வருகிறார்.மேலும் அந்த கதா பாத்திரத்திற்கு நடிகர் விவேக்கே மிக பொருத்தமான நபராம் மேலும் தற்போது வேறு யாரை வைத்து இயக்கப்போவது என மிகுந்த குழப்பத்தில் உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.